search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாக்கெட் உணவுகள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய மக்கள் அனைவருமே வீடுகளிலேயே சமைத்தனர்.
    • கடந்த 2022 ஆண்டை காட்டிலும் கடந்த 2023-ம் ஆண்டு ஒவ்வொரு குடும்பங்களின் மளிகை பட்ஜெட்டும் அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் ஓட்டல்களில் வாங்கி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதே போல் பாக்கெட் உணவுப் பொருட்களை வாங்கி உண்ணும் பழக்கமும் அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய மக்கள் அனைவருமே வீடுகளிலேயே சமைத்தனர்.

    ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக வீடுகளில் சமைக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது ஓட்டல்களும் பெருகி விட்டன. பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவு பொருட்களின் விற்பனையும் அதிகரித்து விட்டது. இதன் காரணமாக இந்தியர்கள் உணவுக்கு செலவு செய்யும் தொகையும் 2 மடங்கு எகிறியது.

    கடந்த 10 வருடங்களை ஒப்பிடும்போது நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ஓட்டல் உணவுகள் மற்றும் பாக்கெட் உணவுகள் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படுவது 41.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

    நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களின் உணவு பட்ஜெட்டில் ஒரு பகுதியாக பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவு மற்றும் பானங்களுக்கான செலவு 16 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த கால கட்டத்தில் நகரங்களில் உயர் வருவாய் கொண்ட மக்கள், பாக்கெட்டு களில் விற்கப்படும் உணவுகளுக்கு 2.2 மடங்கு அதிகம் செலவு செய்கின்றனர்.

    கடந்த 2022 ஆண்டை காட்டிலும் கடந்த 2023-ம் ஆண்டு ஒவ்வொரு குடும்பங்களின் மளிகை பட்ஜெட்டும் அதிகரித்துள்ளது. பானங்கள் மற்றும் பாக்கெட் உணவுகளுக்கு செலவு செய்யும் தொகை 9 சதவீதத்தில் இருந்து 10.5 சதவீதமாகவும், பால் மற்றும் பால் பொருட்களுக்கான செலவு 7 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாகவும், பழங்கள் மற்றும் உலர் பழங்களுக்கான செலவு 3.4 சதவீதத்தில் இருந்து 3.8 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

    அதே நேரத்தில் உணவு தானியங்களுக்கான செலவு 6.6 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாகவும், காய்கறிகளுக்கான செலவு 4.6 சதவீதத்தில் இருந்து 3.8 சதவீதமாகவும், முட்டை, மீன், இறைச்சிக்கான செலவு 3.7 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாகவும், பருப்பு வகைகளுக்கான செலவு 1.9 சதவீதத்தில் இருந்து 1.2 சதவீதமாகவும், சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றுக்கான செலவு 1.2 சதவீதத்தில் இருந்து 0.6 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

    பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை மூன்றை சோதனைக்கு எடுத்துக்கொண்டால், அதில் ஒரு பாக்கெட்டில் உள்ள உணவு மரபணு மாற்றப்பட்டதாக உள்ளது என சோதனை முடிவில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    பிரெட்டில் தடவி சாப்பிட பயன்படுத்தும் சிறிய பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சாஸ் முதல் நொறுக்குத்தீனிகள், உணவுப்பொருட்கள் என சகலமும் தற்போது பாக்கெட்டில் அடைக்கப்படுகிறது. நீண்ட நாட்கள் கெடாமல் இவை இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வேதிப்பொருட்கள் மூலப்பொருட்களாக சேர்க்கப்படுகிறது.

    இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியுள்ளது. டெல்லி, குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள கடைகளில் கிடைக்கும் 65 வகையான பாக்கெட் உணவுகளை சேகரித்துள்ளனர்.

    இவற்றில் 30 இந்திய தயாரிப்பாகவும், 35 இறக்குமதி செய்யப்பட்டதாகவும் இருந்துள்ளது. மேற்கண்ட 65 வகை பாக்கெட் உணவுகளை சோதனை செய்ததில் 21 பாக்கெட்டுகளில் இருக்கும் உணவுகள் மரபணு மாற்றப்பட்டுள்ள பொருட்களை மூலப்பொருளாக கொண்டுள்ளது.

    அதாவது, மூன்று பாக்கெட் உணவுகளை எடுத்துக்கொண்டால் அதில் ஒன்று மரபணு மாற்றம் செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செய்யப்பட்டதாக உள்ளது.

    முன்னணி நிறுவனங்களின் பொருட்கள் என்றாலும் மூன்றாவது தரப்பால் தயாரிக்கப்பட்டு இந்தியாவால் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களே இதில் அடக்கம். பச்சிளம் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் எண்ணெய், சிரப், உணவுப்பொருட்கள் ஆகியவற்றிலும் இந்த மரபணு மாற்றப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    மரபணு மாற்றப்பட்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை அரசின் அனுமதி இல்லாமல் விற்பது சட்டவிரோதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×